செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

லிபியாவில் ரத்த ஆறு - புரட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுகின்றனர்

எகிப்தில் மக்கள் புரட்சி வெடித்து கிளம்பியதை அடுத்து அதன் பக்கத்து நாடுகள் அனைத்தும் ஆட்டம் கண்டுவருகின்றன. லிபியாவின் சர்வாதிகாரி கடாபியின் கொடுகோன்மை ஆட்சியால் வேருப்படைந்திருந்த   மக்கள் கொதித்தெழுந்தனர்.  நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பைதா, பெங்ஹசி ஆகிய நகரங்களை மக்கள் கைப்பற்றிவிட்டனர். இந்தப் போராட்டம் திங்கள்கிழமையன்று தலைநகர் திரிபோலிக்கும் பரவியது.அரசுக்குச் சொந்தமான அல்-ஜமாஹிரியா தொலைக்காட்சி, அல்-ஷபாபியா வானொலி நிறுவனக் கட்டடங்களை புரட்சியாளர்கள் அடித்து நொறுக்கினார். திரிபோலி தவிர, பைதா, டெர்னா, தோப்ரூக், மிஸ்ரதா போன்ற நகரங்களிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.கடாபி தப்பியோடி விட்டதாக செய்தி வருகிறது ,ஆனாலும் அவரது மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாஃபி , போராடும் மக்கள் மீது ராணுவத்தையும் , காவல் துறையும் ஏவிவிட்டு கடுமையாக மக்கள் போராட்டங்களை நசுக்க கடும் முயற்சி செய்கிறான். ஆனாலும் மக்கள் எழுச்சி அடக்கமுடியாத பேரலையாக எழுந்து வந்து கொண்டே இருக்கிறது. அது கடாபியை மட்டுமல்ல மன்மோகன் சிங்கையும் அது தூக்கி எறியும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்