திங்கள், 28 பிப்ரவரி, 2011

சீருடனும் சிறப்புடனும் நடைபெற்ற சி.டபிள்யு.பி . யின் அமைப்பு மாநாடு





கம்யூனிஸ்ட் வொர்க்கர்ஸ் பிளாட்பார்மின்(CWP) அகில இந்திய அமைப்பு மாநாடு நவம்பர் 19, 20, 21ம் தேதிகளில் மதுரையில் நடைபெற்றது. நவம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர். நகர் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் அகில இந்திய அளவிலான 49 பங்கேற்பாளர்களைக் கொண்ட உள் அரங்க மாநாடு நடைபெற்றது. நவம்பர் 21 ம் நாள் செல்லூர் கண்ணையா முத்தம்மாள் திருமண மண்டபத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. உள்அரங்கில் நடைபெற்ற மாநாட்டினை தோழர் எஸ்.சங்கர் சிங்கும் தோழர் அ.ஆனந்தனும் தலைமையேற்று நடத்தினர். பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசக் கொடியினைத் தோழர் சங்கர் சிங் ஏற்றினார். அதன்பின் சி.டபிள்யு.பி.யின் அகில இந்திய அமைப்புக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைப்பு ரீதியான செயல்பாட்டில் ஈடுபட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ள சூழ்நிலையை விளக்கும் அறிக்கை மீதான விவாதம் நவம்பர் 19ம் நாள் நடைபெற்றது.
நவம்பர் 20 அன்று சர்வதேசிய, தேசிய சூழ்நிலைகளை விளக்கும் ஆவணம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அது இரு கூட்டத் தொடர்களில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சியின் அமைப்புச் சட்டம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப் பட்ட பின்னர் புதிய மத்தியக் குழு ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது.
மேலும் படிக்க
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 
http://maatrukkaruthu.blogspot.com/2011/02/blog-post_6559.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்