திங்கள், 28 பிப்ரவரி, 2011

மூடிக்கிடந்த கண்களைத் திறந்த விக்கி லீக்கும் ராடியா டேப்பும்

அம்பலப்படுத்தும் முதலாளித்துவ அவலங்கள்
சமீபத்தில் டெல்லியில் நடந்ததாக ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியது. அதாவது ஒரு கணவன் தனது மனைவியைக் கொன்று அவளது உடலைக் கெடாமல் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டி ஒன்றைக் கடையில் வாங்கி அதில் பல தினங்கள் வைத்திருந்தான் என்பதே அச்செய்தி. இருந்தாலும் கூட அப்பெட்டியிலிருந்தும் துர்நாற்றம் கிளம்புவதை அவனால் தடுக்க முடியவில்லை. அதை வைத்தே அவனைக் கைது செய்து விட்டார்கள்.
எத்தனை பாதுகாப்பு வசதிகள் செய்து பராமரித்தாலும் இறந்துவிட்ட மனித உடலில் இருந்து துர்நாற்றம் கிளம்புவதைத் தவிர்க்க முடியாது. அதீத முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான சாதனங்களை வடிவமைத்து அத்துர்நாற்றம் கிளம்பும் காலத்தை வேண்டுமானால் தள்ளிப்போட முடியுமே தவிர நாற்றம் வராமல் நிரந்தரமாகத் தடுக்க ஒரு வழியுமில்லை.
அதையொத்த விதத்தில் தான் சமூகத்திற்குக் கொடுப்பதற்கென்று உயிரோட்டமுள்ள ஆக்கபூர்வமான எதையும் கொண்டிராது இறந்துவிட்ட நிலையில் இருக்கும் முதலாளித்துவமும் உலக அளவிலும் இந்திய அளவிலும் சகிக்க முடியாத துர்நாற்றங்களை வெளிவிட்டுக் கொண்டுள்ளது. அதனை அவ்வாறு வெளிப்படுத்தும் இறந்துவிட்ட பிணத்தை வைத்திருக்கும் குளிர்பதனப் பெட்டியின் துளைகள் துவாரங்களாக விக்கிலீக்கும் ராடியா டேப்பும் செயல்பட்டு வெளிப்படையாக ஜனநாயக அடிப்படைகளில் செயல்படுவது போல் தோற்றம் காட்டிக் கொண்டிருக்கும் உலக மற்றும் உள்ளூர் முதலாளித்துவ அமைப்புகளை அடையாளம் காட்டிக் கொண்டுள்ளன.
மேலும் படிக்க
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்