திங்கள், 28 பிப்ரவரி, 2011

ராசாவின் பதவி விலகலும் கபில் சிபலின் பொறுப்பேற்பும் மன்மோகன் சிங் அரசால் ஊழலை மூடிமறைக்க அரங்கேற்றப்பட்டதொரு ஓரங்க நாடகம்




நான் அடிப்பது போல் அடிக்கிறேன், நீ அழுவதுபோல் அழு என்பது நமது ஆட்சியாளர்களின் நடவடிக்கை ஆகிவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்கப்பட்டதில் நடத்த ஊழல் இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி மூலம் வெளிவந்தவுடன் அதனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஊடகங்கள் மூலமும் வந்த விமர்சனங்களின் விளைவாகத் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ராசா பதவி விலக நேர்ந்தது. அவர் வகித்த தொலைத் தொடர்பு அமைச்சகம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது.
மத்திய மந்திரி சபையில் புதிதாகச் சேர்க்கப்பட்டவராக இருந்தாலும் திருவாளர் கபில் சிபல் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடுத்தபடியாக அதிகம் மதிக்கப்படுபவர். அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர், சிறந்த ஆங்கில அறிவு பெற்றவர், நாவன்மை பொருந்தியவர் என்பவற்றோடு கூட அவருக்கு ஊடகங்கள் அளித்துவரும் அதீதமான விளம்பரத்திற்கு வேறொரு காரணமும் உண்டு. அதே காரணத்திற்காகத் தான் மன்மோகன் சிங்கும் நேர்மையாளர் என்று ஊடகங்களால் கருதப்படுகிறார்.
அதாவது அரசியலில் சமீபத்தில் நுழைந்தவர்களாக இருப்பது தற்போதெல்லாம் பலரது நற்பெயருக்கு ஒரு காரணமாக ஆகிவருகிறது. அந்த அடிப்படையில் இவர்கள் இருவரும் பலகாலம் அரசியலில் இருந்து பதவிகள் வகித்துப் படிப்படியாகச் சீரழிந்து இன்று பொது வாழ்க்கையில் இருக்க வேண்டிய மதிப்புகள் எதுவும் இல்லாமல் அவப்பெயர் எடுத்த மூத்த அமைச்சர்களைப் போன்றவர்கள் அல்ல என்பது இவர்களது நற்பெயருக்கான முக்கியக் காரணமாக உள்ளது. ஒப்பு நோக்குமிடத்து முழுநேர அரசியலுக்குப் புதியவர்கள் என்பதும் அவர்களுக்கு ஊடகங்கள் மூலமாக ஒரு நற்பெயரை ஏற்படுத்தித் தந்துள்ளது.
மேலும் படிக்க 
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்