செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

இப்ராஹீம் ஹளிபுல்லா - ஜம்மு காஷ்மீர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்


சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள சிறந்த நீதிபதிகளில் இப்ராஹீம் ஹலிபுல்லா முதன்மையானவர். இரண்டாவது தலைமுறை நீதிபதியான இவர் தனது சொந்த திறமை மூலமே நீதிபதியானார் என்றால் அது மிகை அல்ல. பல சிறப்பான வழக்குகளில் மிகவும் நேர்மையாகவும், அரசுக்கு எதிராக தையிரியமாகவும் தீர்ப்பு சொன்னவர். 19 ,பிப்ரவரி 2009ல் வழக்கறிஞர்களும்  , நீதிபதிகளும் , நீதிமன்றங்களும் தாக்கப்பட்ட வழக்கில் தாக்குதலுக்கு காரணமான காவல் துறை  உயரதிகாரிகளை பணி நீக்க பரிந்துரை செய்தவர். இவ்வாறு பல சிறப்புகளை பெற்ற இப்ராஹீம் ஹளிபுல்லா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். ஜம்முகாஷ்மிரில் ராணுவத்தின் ஆட்சி நடந்து வருகிறது. ராணுவம் அங்குள்ள மக்களை வாட்டி வதைக்கிறது. இது போன்ற நேர்மையான நீதிபதி அங்கு தலைமை நீதிபதியாக இருந்தாலாவது அந்த மக்களின் துயரங்களை நீதிமன்றங்களில் முறையிட அம்மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்