திங்கள், 28 பிப்ரவரி, 2011

கல்விக்கட்டண உயர்வினை எதிர்த்த இங்கிலாந்து மாணவர் போராட்டம்:


சளைக்காத மாணவர் இயக்கத்தின் முன் பலிக்காமல் போன ஆட்சியாளரின் தந்திரங்கள்
பிரான்ஸையே உலுக்கி எடுத்த உழைப்பாளர் மற்றும் மாணவர் போராட்டங்கள் ஓய்ந்தது போல் காட்சியளித்தாலும் நீறுபூத்த நெருப்பாக இருந்து கொண்டுள்ளன. அந்நிலையில் லண்டன் மாநகரையே இங்கிலாந்து நாட்டின் மாணவர் போராட்டங்கள் உலுக்கி எடுத்துக் கொண்டுள்ளன. இது ஐரோப்பாக் கண்டமே ஒரு வகையான மகத்தான எழுச்சியினால் கொந்தளித்துக் கொண்டிருக்கும் தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
2010 நவம்பர் 10ம் நாள் பயிற்சிக் கட்டண உயர்வினை எதிர்த்து ஒரு மாணவர் எழுச்சி லண்டன் நகரில் உருவெடுத்தது. 50,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் அணிதிரண்டு கட்டண உயர்வை எதிர்த்த கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் அணிவகுத்து வரும் பாதை லண்டன் மாநகரக் காவல்துறைக்கு ஏற்கனவே தெரிந்திருந்ததால் காவல்துறை அந்த ஊர்வலத்தை இடையில் தடுத்து நிறுத்தியது. இலக்கைச் சென்றடைய முடியாத மாணவர்கள் அப்போது இங்கிலாந்தை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அலுவலகத்தைத் தாக்கியதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறின.
அடுத்துக் கல்விக் கட்டண உயர்வு குறித்த மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட நாளான 9.12.2010 அன்று ஒரு பெரும் மாணவர் கிளர்ச்சி லண்டன் நகரை மீண்டும் உலுக்கி எடுத்தது. இந்த முறை காவல் துறையினரால் யூகித்து அறிய முடியாத வகையில் அணிவகுப்பு மாணவர் அமைப்புகளால் திட்டமிடப்பட்டது. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட பாடல்கள் இசைத்த வண்ணம் சென்ற ஊர்தி ஒன்று மாணவர்களை வழிநடத்தியது. காவல் துறையினர் ஒவ்வொரு முனையாக மாணவர் ஊர்வலத்தைத் தடுக்கத் தடுக்க அங்கிருந்து மாற்றுப் பாதையில் அந்த ஊர்தியை வழி நடத்தி ஊர்வலத்தை நகர் முழுவதும் வியாபித்த ஒன்றாக அணிவகுப்பை ஏற்பாடு செய்தவர்கள் ஆக்கினர்.
மேலும் படிக்க
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்