புதன், 9 ஏப்ரல், 2014

ஜெயலலிதா சிபிஎம்-ஐ கூட்டணியில் இருந்து நெட்டித் தள்ளிவிட்டதன் பலன் நேற்று மதுரை நீதிமன்றத்தில் தெரிந்தது: DYFI - மாநிலச் செயலாளர் வேல்முருகன் குற்றவழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார்

2006 ஆம் ஆண்டு எனது தொகுப்பிலும் தமிழிலும் வெளிவந்த “கேளாதசெவிகள் கேட்கட்டும்...” தியாகி பகத்சிங் கடிதங்கள் கட்டுரைகள் நூலை  அச்சுப் பிழைகளுடன் காப்பியடித்து விடுதலைப் பாதையில் பகத்சிங் என்ற பெயரில்  சிபிஎம் கட்சியின் DYFI -யும் பாரதி புத்தகாலயமும் 2007இல் வெளியிட்டனர்.

இவர்களுமா என்று அதிர்ந்து போன நாம் ஏன் இப்படிச்செய்தீர்கள் என்று மறைந்த தோழர் விடியல் சிவா போன்ற மூத்த இடது பதிப்பகத்தார்கள் மூலம் கேட்டபோது உன்னால் முடிந்ததைச் செய்து பார் என்று ஆணவத்துடன் பதில்சொன்னார்கள். நாமும் இவர்கள் மீது குற்றவழக்குப் பதிவுசெய்ய எவ்வளவோ முயன்றும் மதுரை கே, புதூர் காவல் நிலையத்தில் புகாரை வாங்கவே மறுத்துவிட்டனர். காரணம் அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக-வுடன் சிபிஎம் கட்சி கூட்டணியில் இருந்ததால் காவல்துறை அவர்களுக்கும் வாலாட்டியது.

முகப்பு

புதிய பதிவுகள்