வெள்ளி, 28 அக்டோபர், 2011

கம்யூனிசத்தின் கோட்பாடுகள் - ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ்

             தமிழாக்கம்: மு.சிவலிங்கம் 



[கம்யூனிஸ்ட் லீக்குக்காக 1847-இல் ஏங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, ஜூன் மாதத்தில், “Draft of a Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டாவது வரைவான இந்த நூல் முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் முதல் தொகுதியில் 81-97 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழியாக்கம் செய்தவர் பால் ஸ்வீஸி என்பவர். இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 - டிசம்பர் 8) மார்க்ஸும் ஏங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும் கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து “கம்யூனிஸ்ட் அறிக்கையை” (Communist Manifesto) உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.]

பாட்டாளிவர்க்கத்திடமிருந்து உருப்பெற்ற தத்துவம் - நாகர்கோவில் மார்க்சிய படிப்பு வட்டம்

23 .10 .2011, ஞாயிற்று கிழமை அன்று நாகர்கோவில் , தக்கலை -  லைசியம் பள்ளி வளாகத்தில் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்பாக மார்க்சிய படிப்பு வட்டம் நடைபெற்றது. தோழர்.பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த படிப்பு வட்டத்தில் சென்ற வகுப்பில் எடுக்கப்பட்ட 'இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்' தொடர்ச்சி தோழர்.அ.ஆனந்தன் அவர்களால் நடத்தப்பட்டது. சிந்தனை என்பது சமூகத்தில் இருந்து கிடைப்பது , தொழிலாளி வர்க்கம் உருவாகும் வரை தத்துவம் அனைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்தது .

வெள்ளி, 21 அக்டோபர், 2011

சோசலிஷம் எதற்காக? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


தமிழாக்கம்: சிவலிங்கம்.மு
[1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரை]

பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுனராக இல்லாத ஒருவர் சோசலிஷம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன்.

வியாழன், 20 அக்டோபர், 2011

மார்க்சிசம் - லெனினிசமே இக்காலக்கட்டத்தின் விஞ்ஞான பூர்வமான , அதி உன்னதமான சித்தாந்தம் ஆகும்.


               -      தோழர். சிப்தாஸ் கோஷ்

மார்க்சிசம் - லெனினிசம் மட்டுமே ஒரே புரட்சிகரக் கருத்தியல். இக்காலக்கட்டத்தின் மிகவும் விஞ்ஞான பூர்வமான அதி உன்னத சித்தாந்தம் , அதனால் மட்டுமே முடமாகிப்போன  இந்த முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து மனிதனை விடுவித்து, மனிதனை மனிதன் சுரண்டுகிற அனைத்து வித சுரண்டல்களிருந்தும் விடுதலை பெற்ற , வர்க்க பேதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாமறிவோம். மேலும் ஒரு புரட்சிகரக் கருத்தியல், எப்போதுமே ஒரு உயர்ந்த கலாச்சார மற்றும் அறநெறித் தரத்தை உருவாக்குகிறது என்பதையும் நாமறிவோம். எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டு மக்கள் தேவையான குறைந்தபட்ச கலாச்சார , அறநெறித் தரத்தை அடையாவிட்டால் புரட்சியை கட்டியமைப்பதற்கு சாத்தியம் இல்லை. 

திங்கள், 17 அக்டோபர், 2011

'வால் ஸ்ட்ரீட் ஐ கைப்பற்றுவோம்' - போராட்டம் பல நாடுகளுக்கு பரவுகிறது , ஆட்டம் காணுகின்றன முதலாளித்தவ அரசுகள்


லண்டன் , ரோம் ,ஜெர்மனி, ஸ்பெயின்,போர்ச்சுகல் உட்பட 82 நாடுகளிலுள்ள 1500  நகரங்களில் போராட்டம் வெடித்தது

எந்த முதலாளித்துவம் உலக அளவில் வலுவான சக்தி என்று டாம்பிகத்தொடு வளம் வந்ததோ, அதே முதலாளித்துவம் தான் வறுமையையும், வேலை இல்ல திண்டாட்டத்தையும், உண்டாக்கி உழைக்கும் மக்களை இன்று தெருவில் நிருத்தியிருக்கிறது. எந்த முதலாளித்தும் தொழிலாளர்களை நிருவனப்படுத்தியதோ, எந்த முதலாளித்துவம் தொழிலாளர்களை சுரண்டியதோ , அந்நிய நாடுகளை சொந்த நலன்களுக்காக ஆக்கிரமித்ததோ , குறைவான கூலி கொடுத்து மக்களை அரை பட்டினியோடு வாழ நிர்பந்திததோ,  மக்களை அநியாயமாக கொன்று  குவித்ததோ,இயற்கை வளங்களை அதீதமாக சுரண்டி கொளுத்ததோ , சமூகத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளுக்கும் (கலாச்சார சீர்கேடுகள் உட்பட )  காரணமாக உள்ளதோ அந்த முதலாளித்துவத்தை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் பெருகி வருகின்றன.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

அக்டோபர் 23 : நாகர்கோவில் மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்'


கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவாக இயங்கினாலும் அனைவரும் மார்க்சிய சித்தாந்த வழியில்  நடப்பவர்களே, அதனால் கம்யூ னிஸ்டுகள் ஓன்று பட தடை இல்லை என்பதை உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக பல்வேறு கம்யூனிஸ்டு  கட்சிகளை சேர்ந்தவர்கள்  இணைந்து நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மார்க்சிய சிந்தனை மையத்தின் சார்ப்பாக மார்க்சிய படிப்பு வட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சனி, 15 அக்டோபர், 2011

உலகின் உன்னத வர்க்கம் பாட்டாளி வர்க்கமே



மனித வரலாற்றில் இதுவரை தோன்றிய வர்க்கங்கள் யாவிலும் மிக உன்னதமான வர்க்கம் பாட்டாளி வர்க்கமேயாகும் என்று மார்க்ஸ்  கூறினார். முதலாளித்துவ வர்க்கம் இக்கூற்றை ஏற்காது. சுரண்டல் , அடக்குமுறை கொண்ட வர்க்கம் , ஏமாற்றும் பொய்யும் வஞ்சகமும் சூதும் கொண்ட வர்க்கம் அது . விஞ்ஞான ரீதியான ஆய்வை அவ்வர்க்கம் கொண்டிருக்கவில்லை. தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவது ஒன்றே அதன் குறிக்கோள். 

விழித்தெளுந்த அமெரிக்க பாட்டாளிகள் - ஆட்டம் காணும் அமெரிக்க முதலாளித்துவ அரசு

அமெரிக்க  முதலாளிகளின் லாப வெறிக்காக உலகம் முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வரவேண்டும்,எண்ணெய் வளங்களை கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தான் , ஈராக் , போன்ற நாடுகளை கைப்பற்றுவதும் அங்குள்ள போராளி குழுக்களை ஒடுக்குகிறோம் என்று அந்த நாட்டு அப்பாவி மக்களை மீது  குண்டு போட்டு கொள்வதும்,  அந்நிய நாடுகள் மீது பலவந்தமாக ஒப்பந்தங்களை திணிப்பதும், அமெரிக்க  பாட்டாளிகளின் நலனுக்காக அல்ல அங்குள்ள முதலாளிகளின் நலனுக்கே என்பதை உணர்ந்து கொண்ட உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் மட்டும் அல்ல அங்குள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் , பேரணிகள், முற்றுகை என்று அமெரிக்க அரசை  ஆட்டம் காண வைத்து கொண்டுள்ளது . "ஒரு சதவிகிதமே உள்ள  முதலாளிகளுக்கான அமெரிக்காவே ,அவர்களின் வர்த்தக நலன்களுக்காக 99  சதவிகித மக்களை வஞ்சிக்காதே" என்பதே அங்கு முக்கிய கோசமாக உள்ளது.

புதன், 12 அக்டோபர், 2011

வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டார்

பிரபல உச்ச நீதிமன்ற மூத்த  வழக்கறிஞரும் , பல்வேறு பொது நல வழக்குகளை நடத்தி வருபவரும், சமூக இயக்கங்களில் பங்காற்றி வருபவருமான பிரசாந்த் பூசன் அவர்கள் இன்று (12 .10 .2011 ) உச்ச நீதிமன்றத்தில் உள்ள அவரது வழக்கறிஞர் அறையிலையே ஸ்ரீ ராம சேனா என்ற இந்து மத வெறிவாத அமைப்பை சேர்ந்த மதவெறியர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார். காஷ்மீரில் உள்ள  Armed Forces Special Powers Act  நீக்கம் செய்ய வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார் . அவர் தெரிவித்த கருத்துகளுக்காக இந்து மத வெறிவாத அமைப்புகள் அவர் மீது பாசிச தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.  ஒருவர் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க கூட உரிமை இல்லாத ஆபத்தான  சூழ்நிலையையே இந்த ஆளும் முதலாளித்துவ அரசு பராமரித்து வருகிறது. மிகவும் பிரபலமான உச்ச நீதிமன்ற வழக்கறிங்கர் மீது  உச்ச நீதிமன்றத்தில் வைத்தே தாக்குதலை அரங்கேற்றி உள்ள இந்து  மத  வெறிவாத அமைப்பை இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தலும் உழைக்கும் மக்கள் கடமையும் -ஓர் அறைகூவல்


ஒவ்வொரு முறை மாநில அளவில் ஆட்சிமாற்றம் ஏற்படும் போதும் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடனேயே உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் கூட்டுறவுத் தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆட்சிமாற்றங்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டால் கூட பெரும்பாலும் தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை. அடுத்த ஆட்சிமாற்றம் நடந்த பின்னரே அவை நடத்தப்படுகின்றன. 

வெள்ளி, 7 அக்டோபர், 2011

ஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு

அமெரிக்க கார்ப்பொரேட்டுகளுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்க அமெரிக்க வல்லரசு வன்முறையைக் கையாளத்துவங்கிவிட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட சின்னஞ் சிறுமியைக் கூட எதிரியாகக் கருதி கைது செய்யும் அளவிற்கு அமெரிக்க வல்லரசு இப்போராடத்தைக் கண்டு உள்ளூரப் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளது. லெபனானில் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஜனநாயக உரிமை, மனித உரிமை பற்றிப் பேசிய அதே அமெரிக்க வல்லரசு இன்று தனது சொந்த மக்கள் மீதே மிகப்பெரும் வன்முறைத் தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகி வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் முன்னறிவிக்கின்றன.

அம்பலமாகும் அமெரிக்காவின் போலிஜனநாயகம்

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது, முதலாளிகளுக்கு ஜனநாயகம்; உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம் என்ற உண்மையை அமெரிக்க அரசு மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டுள்ளது. அமைதியான முறையில் ஆயுதம் இன்றி வீதியில் கூடிய அமெரிக்க இளைஞர்களை அமெரிக்க போலீசார் வெறிகொண்டு தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் அமெரிக்காவின் ஜனநாயக முகத்திரையை உலகத்தின் முன்னால் கிழித்தெறிகின்றன.

டுனீசியாவில் பற்றிய தீ அமெரிக்காவிலும் எரிகிறது

டுனீசியாவில் பற்றிய போராட்டத்தீ அரபுநாடுகளில் பரவி, ஐரோப்பாக் கண்டத்தைத் தீண்டியபின் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தலைநகர் நியூயார்க்கில் எரிந்து கொண்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 17 அன்று வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு எதிராக அதன் வீதிகளை நிரப்பத் தொடங்கினர் அமெரிக்க

வியாழன், 6 அக்டோபர், 2011

தொழிலாளி வர்க்கமே வெற்றி 'வாகை சூட வா'

இன்று மலையளவு உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் உருவாவதற்கு காரணமான செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை யாரவது எண்ணி பார்த்ததுண்டா , வெறும் மண்ணை தங்கள் ஓய்வறியாத உழைப்பின் மூலம் செங்கல்லாக மாற்றும் தொழிலாளர்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை காலமெல்லாம் அடிமைகளாக சுரண்டி கொழுக்கும் முதலாளிகள் , தொழிலாளர்கள் தாங்கள் சுரண்டப்படுகிறோம் என்பதை கூட அறியாமல் வைத்திருக்கும் கொடுமையையும், கல்வி மூலம் அவர்கள் வாழ்வில் சிறு வெளிசத்தை நம்பிக்கையை ஊட்டுப்படுவதையும் 'களவாணி'பட இயக்குனர் சற்குணம் அவர்களின் இரண்டாவது படைப்பாக வெளிவந்துள்ள 'வாகை சூட வா' நம் முன் காட்சி படுத்துகிறது.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

ஓ அமெரிக்கா ! - உனக்கும் வருது பார் நெருக்கடி


உலக பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்தி சென்று கொண்டிருந்த ரஷ்ய  கூட்டமைப்பு உடைந்து சிதறிய போது முதலாளித்துவ நாடுகள் கொக்கரித்தன. குறிப்பாக உழைக்கும் வர்க்கமாக இருந்த போதும் அமெரிக்க முதலாளிகள் உலகம் முழுவதும் அடித்த கொள்ளையில் அவர்களுக்கு வாழ்க்கை சம்பளம் எனும் சலுகையில் மிதந்த அமெரிக்காவின் தொழிலாளி வர்க்கமும் பட்டாசு வெடித்து கொண்டாடியது. இன்று நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. அமெரிக்க அரசு கடன் சுமையால் தத்தளிக்கிறது. பல்வேறு நலத்திட்டங்களையும், மானியங்களையும் ரத்து செய்ய அமெரிக்க அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தில் வீடுகளை பறிகொடுத்து விட்டு தெருவில் டென்ட் அடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அமெரிக்க உழைக்கும் வர்க்கம் இப்போது விழித்து  கொண்டு விட்டது.

சனி, 1 அக்டோபர், 2011

வாச்சாத்தி - அதிகார வர்க்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம்


வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் கர்நாடக - தமிழக கூட்டு அதிரடிப்படையும், வனத்துறையும் சேர்ந்து மலை வாழ் கிரமா மக்களுக்கு இளைத்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. வீரப்பன் பெயரை சொல்லிக்கொண்டு வனத்துறையினரே  சந்தனமரங்களை வெட்டி கடத்திக்கொண்டுருந்தனர்.அதற்கு அதிரடிப்படையும், வருவாய் அலுவலர்களும் துணைபோனார்கள்.

முகப்பு

புதிய பதிவுகள்