புதன், 15 டிசம்பர், 2010

ராஜாவின் கொடிய கரம் நீதித்துறை வரை நீண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா ஸ்பெக் ட்ரம் அலை கற்றை இட ஒதிக்கீடு சம்பதமாக அவர் வகித்து வந்த தொலைதொடர்ப்பு துறையிலிருந்து ராஜினாமா செய்தார். அத்தோடு அவர் மீது அடுத்தடுத்த புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இவை அனைத்தும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இப்போது  புதிதாக நீதிபதியை தனது நண்பரின் குற்றவியல் பிணை வழக்கிற்காக அந்த வழக்கில் ஆ.ராஜாவின் நண்பருக்கு சாதகமாக தீர்ப்பை பெறுவதற்காக தனது பதவியை துஸ்பிரயோகம் செய்து அவரை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ரகுபதியும் உச்சநிதிமன்ற நீதிபதி திரு . கோகலேயும் அமைச்சர் ராஜா மீது புகார் தெரிவித்து உள்ளனர். இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதியையே தனது பதவியை காரணம் காட்டி மிரட்டப்படும் போது சாதாரண மக்கள் எப்படி அரசிற்கு எதிராக வழக்கு தொடரமுடியும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது ஆ,ராஜா கண்டிக்கபடவேண்டியவர் மட்டுமல்ல சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டியவர் என்பது நமது கோரிக்கை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்