திங்கள், 28 பிப்ரவரி, 2011

டாக்டர் பாபாசாஹிப் அம்பேத்கார் திரைப்படம் - ஒரு திறனாய்வு





முழுக்க முழுக்கக் கற்பனை அடிப்படையில் எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் சில வரலாற்றுப் பாத்திரங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளுக்கும் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கும் இடையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அதாவது கற்பனைக் கதைகளை எழுதுபவருக்கும், திரைப்படமாக எடுப்பவருக்கும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதையைக் கையாள்பவருக்கு இருப்பதைக் காட்டிலும் கூடுதல் சுதந்திரம் உண்டு. அதாவது அவர் விரும்பினால் கதையை அவர் விரும்பும் விதத்தில் மாற்றிக் கொள்ள முடியும்.
ஆனால் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதை எழுதுபவர்கள், திரைக்கதையை உருவாக்குபவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லை. ஒரு உண்மைக் கதையை அதை அப்படியே சொன்னால் சுவைகரமாக இல்லாமல் அலுப்புத் தட்டும். அதனைத் தவிர்ப்பதற்காக அக்கதையைச் சொல்லும் விதத்திலேயே அதைச் சுவைகரமாக்க வேண்டும். அவ்வாறு ஆக்கும் பொறுப்பும் சிரமமும் வரலாற்றுப் பாத்திரங்களை மையமாக வைத்துக் கதை எழுதுபவர்களுக்கும், திரைப்படம் எடுப்பவர்களுக்கும் உள்ளது.
அதிலும் ஏறக்குறைய சமகாலத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பாத்திரங்களை மையமாகக் கொண்டவையாக ஒருவர் உருவாக்கும் கலைப் படைப்பு இருக்கும் போது அவரது சுதந்திரம் இன்னும் குறுகலாகி விடும். அவருக்கு அவர் கையாளும் வரலாற்றுப் பாத்திரத்தின் வாழ்க்கையை ஒட்டி அவரது படைப்பைச் சுவாரஸ்யமாக்குவதற்காகச் சிலவற்றைப் புனைவது கூட அத்தனை எளிதானதாக இராது. கையாளப்படும் வரலாற்றுப் பாத்திரங்கள் குறித்த சில எதிர்மறை அம்சங்களும் மக்கள் மனதைவிட்டு அகன்றிருக்காது என்பதால் அவற்றில் சிலவற்றைச் சொல்லாமல் விட்டுவிடுவதும் கூடப் பல சமயங்களில் சிரமமாகிவிடும். இந்நிலையில் ஒருவகை ஆவணத் தன்மை அத்தகைய படத்திற்குப் பெரும்பாலும் வந்துவிடும்.
மேலும் படிக்க 
மாற்றுக்கருத்து வலைதளத்திற்கு செல்லவும்  அதன் இணைப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்