திங்கள், 27 டிசம்பர், 2010

ஆளும் வர்க்க நலன்களை உயர்த்தி பிடிக்கும் ஊடகங்களை கண்டிப்போம்

ஆதிதிராவிட மாணவர்கள் 22.12.2010 அன்று அண்ணா சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும் வேலையில்  மறியல் செய்தனர் , சில ஊடகங்கள் மாணவர்கள் மறியல் செய்த நோக்கத்தை கணக்கில் எடுத்து கொள்ளாமல் மாணவர்கள் மறியல் செய்ததை கண்டித்து செய்திகள் வெளியிட்டன. ஆதி திராவிட மாணவர்கள் வசிக்கும் விடுதிகள் மிகவும் மோசமாகவே பராமரிக்க படுகின்றன. இங்கு வழங்கும் உணவு சாப்பிடவே  முடியாத அளவிற்கு கொடுமையாக இருக்கும் என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அரசு நிர்வாகத்தால் மாணவர்கள் எந்த அளவிற்கு மோசமாக நடத்தப்படுகிறார்கள்  என்றால் அந்த மாணவர்களின் மறியல் அன்று மாணவர்கள் கொடுத்த பேட்டியை பார்த்தாலே நன்கு தெரியும். மாணவர்களுக்கு கல்வி அளிப்பது என்பது அரசின் அடிப்படை கடமை ஆகும், கல்வி மட்டும் அல்ல முறையான  தங்கும் , உணவு வழங்கும் விடுதிகள் அமைத்து அதை முறையாக பராமரிக்கவேண்டியதும் அரசின் கடமை ஆகும்.அது எதையும் செய்யாத இந்த அரசு அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் குறிவைத்து ஆட்சி நடத்துவது நாம் கண்கூட பார்க்கும் உண்மை ஆகும். மாணவர்கள் மறியல் செய்ததை ஏதோ ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது போல கண்டிக்கும் ஊடகங்கள் அந்த மாணவர்கள் பல முறை கோரிக்கை வைத்தும் அது கணக்கில் எடுத்துகொள்ளாததால் தான் மாணவர்கள் கடைசி தேர்வாக மறியல் செய்தார்கள் என்பதை மூடி மறைக்கின்றன . இவ்வாறு ஆளும் வர்க்க நலன்களுக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்களையும் , மாணவர்களுக்கு உரிய வசதி செய்து தராத அரசையும் கண்டிப்பது இன்றைய ஜனநாயக வாதிகளின் தலையாய கடமை ஆகும் 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்