வியாழன், 24 பிப்ரவரி, 2011

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயமான பணிப்பாதுகாப்பு வேண்டும்

பெருநகரங்களில் தங்கி வீட்டு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலனவர்கள் திருமணமாகாத 12 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்களே. அவர்களுக்கு வேலை நேரம் என்பது காலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை என எந்த ஈவு இரக்கமும் இன்றி சுரண்டப்படுகின்றனர். அதற்கு அவர்களுக்கு சம்பளமாக ரூ.2 ,000 /-ற்கு  குறைவாகவே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு சரியான உணவு தரப்படுவதில்லை மீதம் இருக்கும் உணவோ அல்லது பழையதோ தான் அவர்களுக்கு உணவாக தரப்படுகிறது. அவர்கள் வரைமுறை இல்லாமல் மாட்டை விட அதிகமாக வேலை வாங்குகின்றனர். திருட்டு பட்டம் எளிதில் அவர்கள் மேல் சுமத்தப்படுகிறது,அதுமட்டுமில்லாமல் அவர்கள் பெரும்பாலனவர்கள் இளம் பெண்கள் என்பதால் அவர்கள் உரிமையாளர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், அதை எதிர்ப்பவர்களை திருட்டு குற்றம் சுமத்தி அடித்து வெளியேற்றுவதும் நடைபெறுகிறது .இது போல் பணியாற்றும் பெண்கள் அனைவருமே கல்வியறிவு இல்லாத  குக்கிராமங்களை சேர்ந்தவர்கள் , அவர்களுக்கு சட்டப்படி பணிப்பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை ஆகும் , அனால் அரசு ஏழைகளின் குரலுக்கா மதிப்பு கொடுக்கும். இது போல பாதிக்கப்படும் அபலை பெண்களின் பணிப்பாதுகாப்புக்கும்   , உயிர் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுக்க நாம் ஓன்று பட்டு குரல் எழுப்ப வேண்டும். அந்த உழைக்கும் மகளிரின் உரிமைக்கு கரம் கொடுப்போம். அவர்களின் மீது காட்டுமிராண்டி தனமாக கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளை இரும்பு கரம் கொண்டு எதிர்த்து போராடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்