வியாழன், 21 ஜூலை, 2011

தமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளிடம் முன்னிறுத்தியுள்ள வாய்ப்புகள்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.

வெளிப்படையான அடக்குமுறை மூலம் அவர்களுடைய சிந்தனை சுதந்திரமானதாக இல்லாதவாறு ஆக்கப்படாவிட்டாலும் எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களால் அடிப்படைப் பிரச்னைகளாக இல்லாதவை பிரச்னைகளாக ஆக்கப்படுகின்றன. அனைத்து இல்லங்களிலும் மிகப் பெரும்பாலான சமயங்களில் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் மூலம் ஊடகங்களால் பரப்பப்படும் செய்திகளே மக்களின் மனதைப் பெருமளவு ஆக்கிரமித்து அவர்களது மனதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவையாக உள்ளன.

அவர்களாகவே சிந்தித்து அவர்களின் பிரச்னைகள் சார்ந்த கருத்துக்களை வகுத்தெடுத்துக் கொள்ள மிகக் குறைந்த வாய்ப்பே இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு உள்ளது. அதனால் பணபலமும் ஆளும்வர்க்க ஆதரவும் கிட்டும் ஊடகங்களின் பின்பலமும் கொண்ட உடைமை வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் கட்சிகளில் ஏதாவதொன்றே ஆட்சிக்கு வரும் என்ற சூழ்நிலையே தற்போது பொதுவாக நிலவுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்