வியாழன், 21 ஜூலை, 2011

அறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டுக்கட்டை ஆகலாமா?

அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.நமது ஆசிரியர் சமூகம் பொறுப்புள்ளதாக இருந்தால் மாணவரின் இந்தப் போதாமையைக் கருத்திற் கொண்டு அவர்களது ஆங்கில அறிவை மேம்படுத்தக் கூடுதல் சிரத்தை எடுத்துக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆனால் இங்கோ ஆசிரியர் எனும் குதிரைகள் கீழே தள்ளுவது மட்டுமல்ல: அவை குழியும் பறிக்கின்றன.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது மக்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பலரது முன் முயற்சியினால் ஆங்கில வழியில் கற்பிக்கும் பிரிவொன்று 6‡வது வகுப்பில் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று முதன்முதலில் ஆங்கில வழியல் சேர்ந்த மாணவர்கள் +2 வகுப்புவரை வந்துவிட்டனர். எனவே +2 வகுப்பிலும் ஆங்கிலப் பிரிவு ஒன்றைத் தொடங்க வேண்டிய கட்டாயம் பள்ளிக்கு ஏற்பட்டது.

மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்