வியாழன், 21 ஜூலை, 2011

சட்டங்கள் மட்டுமே ஊழலைத் தடுத்து விடாது

ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேயின் இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்

இந்திய அரசியல் அரங்கில் சமீப காலத்தில் ஊழலுக்கு எதிரான இயக்கப் போக்கு முழுவீச்சுடன் தலைதூக்கி வருகிறது. இந்த இயக்கப் போக்கினைத் தொடங்கி வைத்தது கம்யூனிஸ்ட் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கட்சிகளோ அல்லது பிரதான எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யோ அல்ல.

சமூக ஊழியர் அன்னா ஹசாரே இதனைத் தொடக்கி வைத்தார். அவர் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் தொடங்கிய போது அவருடன் பிரசாந்த் பூசன், சாந்தி பூசன் போன்ற வழக்கறிஞர்களும், மேத்தா பட்கர் போன்ற சமூக இயக்கங்கள் கட்ட முனைவோரும், கிரண்பேடி போன்ற ஓய்வு பெற்ற அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவரும் பங்கேற்றனர். அவர்களோடு ஏராளமான படித்த இளைஞர்கள், மத்தியதர வர்க்கத்தினர், பல மட்டங்களிலான சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்