செவ்வாய், 5 ஜூலை, 2011

காட்டுமிராண்டி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்! ஏழைகளின் உயிர் என்ன அவ்வளவு மலிவா ?


சென்னை தீவுத்  திடல் அருகே உள்ள ராணுவ குடியிருப்பிற்கு  ஞாயிறு (03 .07 .2011 )  அன்று  பழம் பறிப்பதற்காக தீவு திடல் இந்திரா நகர்  குமார் - கலைவாணி தம்பதியின் இரண்டாவது மகனான 8 ம் வகுப்பு  படித்து வந்த தில்ஷான் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். சிறுவன் என்று பார்க்காமல் அதுவும் பட்டபகலில்  காஷ்மீர், வடகிழக்கு இந்தியாவில் கேட்பாரில்லாமல் மனித உயிரை வேட்டையாடும் ராணுவ உடைதரித்த காட்டுமிராண்டிகளில்  ஒருவன்  அந்த சிறுவனை  தலையில் சுட்டு கொன்றுள்ளான். தமிழக அரசோ சுட்டு கொன்ற அந்த ராணுவ வீரனை பிடிக்காமல் இந்த கொலைக்கு நடவடிக்கை எடுக்க போராடிய பாதிக்கப்பட்ட  மக்களை அடித்து விரட்டியுள்ளது.   அரசின் ராணுவமும், போலீஸும் உழைக்கும்  மக்களை இரண்டாம் கட்ட குடி மக்களாகவே நடத்துகிறது. இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென சமூக இயக்கங்களுக்கான வழக்கறிஞர் அமைப்பு , தமிழ்நாடு (LFSM ) கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்