வியாழன், 21 ஜூலை, 2011

தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன?

தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார். உழைக்கும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளான தோழர்கள் தங்கராஜ் (பட்டாசு), செல்வராஜ் (அச்சகம்), சத்தியமூர்த்தி (அரசு ஊழியர்), பாரதி (அரசு ஊழியர்), ஆனந்த் ஜெயக்குமார் (பொதுத்துறை), த.சிவக்குமார் (மாற்றுக் கருத்து இதழ் ஆசிரியர்) ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சி.டபிள்யு.பி-ன் தென் இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் அ.ஆனந்தன் அதில் சிறப்புரை ஆற்றினார். தோழர்களின் உரைகள் தோழர் வரதராஜ் தனது தலைமை உரையில் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகத் தற்போது ஆகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்