வியாழன், 21 ஜூலை, 2011

வானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு

“பொய் சொல்றது ஈஸி, உண்மைய சொல்றது தான் கஷ்டம்”

“இந்த உலகத்தில் இரண்டே ஜாதிதான் உண்டு. ஒன்னு பணக்கார ஜாதி இன்னொன்னு ஏழை ஜாதி”

“இங்க யாரு போலீஸ் யாரு திருடன்னே தெரியல”

இதுபோன்ற வசனங்கள் எங்கும் எவரிடமும் எடுபடும். ஏனெனில் இவை இன்று நிலவும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.

இந்த சமூகத்தில் தன்னிடமுள்ள திறமைகளை வியாபாரப் பொருளாக்கத் தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன். அவன் தான் வாழ முடிந்தவனாகவும் இருப்பான். வியாபாரம் ஒரு விரும்பத்தகுந்த தொழிலல்ல. அதனைத் திறமையாகச் செய்ய நிறையப் பொய் பேசியாக வேண்டும்.உண்மையை மட்டுமே பேசவும் உண்மையாக வாழவும் விரும்புபவர் எவரும் வியாபாரி ஆக முடியாது. அவர் வியாபாரத்தில் தோற்றுப் போய்விடுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்