வியாழன், 21 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.

தற்போதைய தமிழக அரசின் அந்நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பாகும். சி.பி.ஐ(எம்). கட்சி இன்றுவரை தமிழகத்தைத் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க-வுடன் உறவு வைத்துக் கொண்டுள்ள கட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்