வெள்ளி, 1 ஜூலை, 2011

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ராஜா அண்ணாமலை மன்றத்தில் கருத்தரங்கம்

பெட்ரோல் , டீசல் , சமையல்  எரிவாயு  ஆகியவற்றின் வரலாறு காணாத விலையுயர்வு உழைக்கும் மக்களை கடுமையான பாதித்துள்ளது, இந்த விலை உயர்வை கண்டித்து கடந்த 23 .06 .2011  அன்று மெமோரியல் ஹாலில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களை  சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டார்கள் , தற்போது அதன் தொடர்ச்சியாக 02 .07 .2011   , சனிக்கிழமை , மாலை 4   மணிக்கு சென்னை, பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில்  இது தொடர்ப்பாக கருத்தரங்கத்தை நடத்துகிறது. அனைத்து தொழிலாளர்களும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு COITU  மத்திய தொழிற் சங்கம் அழைப்பு விடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்