வியாழன், 21 ஜூலை, 2011

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்

நாகர்கோவில்
மார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் சாரம்சத்தையும் அதன் இன்றைய பொருத்தத்தையும் தொகுத்து வழங்கும் பொறுப்பினை முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் சிறப்புற ஆற்றினார்.
இன்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் கருத்துக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு வழிகாட்டும் தன்மையைக் கொண்டவையாக எவ்வாறு உள்ளன என்பதை விளக்கும் சீரிய உரை ஒன்றினை அவர் முன்வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்