வெள்ளி, 8 ஏப்ரல், 2011

ஐ.பி.எல்லின் ஏலத்தை மிஞ்சியது பார்கவுன்சிலின் சேர்மன் பதவி


பார்கவுன்சிலின்  உறுப்பினர் தேர்தல் சென்ற மாதம் நடந்து முடிந்தது. உயர் நீதிமன்றம் பல கடுமையான கட்டுப்பாடுகளை  விதித்திருந்தும் பணமும் ,சரக்கும்,பிரியாணியும் ஆறாக பாய்ந்தது. நாகர்கோவில்  போன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் மொத்தமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டன. உயர்நீதிமன்றம் தேர்தலில் முறைகேடுகள் நடந்த இடங்களின் வாக்குகளை செல்லாததாக்கியது. தற்போது 25  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் இருந்து சேர்மன் தேர்வு நடைபெறபோகிறது. அந்த தேர்வுக்கு தான் குதிரைப்பேரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த ஏலத்தின் ஆரம்ப பேரம் ரூபாய்.50  ௦லட்சம் ஆகும். இப்படி விலைபோகும் உறுப்பினர்களை கொண்டு நமது பார் கவுன்சில் இயங்குமானால் அது ஒட்டுமொத்த நீத்துறையையே கடும் ஊழலுக்கு இறையாக்கி விடும். மக்கள் கடைசி புகலிடமாக தான் நீதிமன்றங்களை நாடிவருகிறார்கள் அந்த நீதிமன்றங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நீதித்துறையில் நடைபெறும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்போம்.  ஊழலுக்கு எதிராக கரம் கோர்ப்போம்.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்