வெள்ளி, 8 ஏப்ரல், 2011

அண்ணா ஹசாரேவிற்கு ஆதரவு பெருகுகிறது- மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம்


ஊழலை ஒழிப்பதற்கான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடுமுழுவதும் அலை  அலையாக ஆதரவு  பெருகி கொண்டே செல்கிறது.  நாட்டில் பல இடங்களில் மாணவர்கள் , சமூக  ஆர்வலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வரும் ஏப்ரல் 13  அன்று  சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அண்ணா ஹசாரே அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவெங்கும் துடிப்புடன்  மக்கள் போராட்டங்கள் வெடித்து கிளம்ப துவங்கியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள் இன்றும் (08 .04 .2011  )  நடைபெற்றன. மதுரையில் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் காந்தி சிலைக்கு அருகிலல் உண்ணாவிரதப்போராட்டத்தினை

 கே.கே.சாமி , பிளமின் ராஜ் , வேல்முருகன், பகத்சிங் ஆகியோர் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களும், பொதுமக்களும் இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில்  ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு  தெரிவித்தனர்.   ஊழலுக்கு எதிராக  இந்தியாவெங்கும்  மக்கள் கிளர்ந்து எழுவது  1970  ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய மக்கள் இயக்கத்தை(J.P.Movement) ஞாபகமூட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்