வியாழன், 21 ஏப்ரல், 2011

கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் நாகர்கோவில் கூட்டம்

நாகர் கோவில் வருவாய்த் துறை ஊழியர் சங்கக் கட்டிடத்தில் கம்யூனிஸ்ட் ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டம் ஒன்று 19.03.2011 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது....................

............................................தள்ளிப் போடலாம் தவிர்க்க முடியாது

கம்யூனிஸ்ட் அறிக்கையில் உயர்த்திப் பிடிக்க வேண்டிய அம்சங்கள் சமூக மாற்றம் வரலாற்றின் தவிர்க்க முடியாத விதி என்பதும், நமது சமூகத்தில் நிகழும் அனைத்துப் போராட்டங்களும் வர்க்க அடிப்படையைக் கொண்டவையே என்பதுமாகும். முதலாளித்துவம் ஒழுங்கற்ற உற்பத்தி முறையைக் கொண்டது அதனால் மக்கள் வாங்கும் சக்தியைத் தாண்டியும் அதன் உற்பத்தி செல்லக் கூடியது. அதன் விளைவாக ஆலை மூடல்கள் போன்றவை தோன்ற வழிவகுத்து சமூகத்தில் உழைப்பாளர் எழுச்சியை ஏற்படுத்த வல்லது. அந்நெருக்கடிகளின் தாக்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கம் நெருக்கடியின் அடிப்படையையும் தன்மையையும் ஆழமாக உணரும் வாய்ப்பினைக் கொண்டிருக்கிறது. பிரச்னைகளுக்கானத் தீர்வு அந்த அமைப்பையே அகற்றி சமூக உற்பத்தியை லாப நோக்கத்திலிருந்து விடுவித்து மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டதாக ஆக்குவதிலேயே உள்ளது என்ற அரசியல் கருத்தைத் தொழிலாளி வர்க்கம் உணரும் நிலைக்கு உந்தப்படும் நிலையும் தவிர்க்க முடியாமல் தோன்றும் வாய்ப்பினைக் கொண்டது. அதன் விளைவாக சமூக மாற்றம் என்பது நடந்தே தீரும். சமூக மாற்றத்தைச் சிறிதளவு ஒத்திப் போடவோ சிலகாலம் தள்ளி வைக்கவோ முடியுமே தவிர அதனைத் தவிர்க்க முடியாது..............................


மேலும் படிக்க
http://maatrukkaruthu.blogspot.com/2011/04/19.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்