திங்கள், 14 மார்ச், 2011

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மீது பிஷப்பின் கூலிப்படையினர் தாக்கியதை வேடிக்கை பார்த்த காவல் துறை

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் கடந்த 5 நாட்களாக சட்ட விரோதமாக நிர்வாகத்தை கைப்பற்றி உள்ள  பிஷப்பின் பிடியில் இருந்து கல்லூரியை மீட்டு அரசின் சிறப்பதிகாரியை  நியமிக்க கோரி  தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதை தடுக்கவும் ,மாணவர்களை மிரட்டவும் பிஷப்  கூலிப்படையை ஏவி விட்டு  இன்று  (14.03.2011) உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கற்களை கொண்டு  தாக்கினர். அதை கண்டித்து கூலிப்படையை கைது செய்ய கோரி மாணவர்கள் கோரிப்பாளையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.அனால் காவல் துறையோ கூலிப்படையை கைது செய்யாமல் போராடிய மாணவர்களை கைது செய்தது.ஆனாலும் மாணவர்கள் தொடர் உண்ணாவிரத்தை கைவிடாமல் அரசு சிறப்பதிகாரியை நியமிக்கும் வரை கைவிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர். நாமும் அவர்களின் தொடர்  போராட்டத்திற்கு  ஆதரவாக குரல் கொடுப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்