புதன், 9 மார்ச், 2011

பாட்னா மாணவர்களின் தீரம்மிக்க போராட்டம் - விரட்டியடிக்கப்பட ராணுவ ஜவான்கள்


பிகார் தலை நகரமான பாட்னாவில் பள்ளியில் 14 வயதிற்குட்பட்ட மாணவ ,மாணவிகள் தங்கள் படிப்பதற்கு இடையுறாக இருந்த ராணுவ ஜவான்களை பள்ளியை விட்டுவிரட்டி அடித்தனர்.இந்த பள்ளியில் மூன்று அறைகளில் அனுமதி இல்லாமலையே தங்கி கொண்டு மாணவர்களை கிண்டல் செய்வதும் ,ஆபாச பாடல்களை பாடியும் மாணவ மாணவிகளுக்கு பெரும் தொல்லை கொடுத்து கொண்டிருந்தனர் பி.ஆர்.எப் படைவிரர்கள் அவர்களின் இந்த போக்குகளை மாணவர்கள் கண்டித்து அவர்கள் அறைகளை காலி செய்ய வலியுறுத்திய போதும் அரசோ ,காவல் துறையோ அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை, இதனால் தங்களது படிப்பும் ,சுதந்திரமும் பாதிக்கபடுவதால் மாணவர்கள் அவர்கள் தங்கி இருந்த அறையை உடைத்தும் ,அவர்களின் வாகனங்களை நொறிக்கியும் தள்ளினர். 

கொடூர மனம் படைத்த ராணுவத்தினர் அந்த சின்னஞ்சிறிய   மாணவர்கள் மீது லத்தி ஜார்ச் செய்தனர். இதை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். இது மக்கள் மத்தியில் மாணவர்களுக்கு பெரும் அனுதாபத்தை தேடிதருவதை உணர்ந்த அரசு அந்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது.இது போல வட இந்திய முழுவதும் பள்ளிகளில் டெண்ட அமைத்து தங்கியுள்ள ராணுவத்தினரை வெளியேற்ற கோரும் கோரிக்கை மக்களிடையே வலுத்துள்ளது . அந்த பிஞ்சு உள்ளங்களில் எழுந்த போராட்ட கனலை நாம் வரவேற்போம். துங்கி கிடக்கும் மாணவ சமூகத்தை தட்டி எழுப்புவோம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்