திங்கள், 13 டிசம்பர், 2010

நண்பர்களே!

நண்பர்களே!
       

            பல்வேறு இன்னல்கள் சமூகத்தை - சமூக வாழ்க்கையை கடினப்படுத்திக் கொண்டுள்ளது. இச்சமூகத்தில் மிகவும் அழகாக உருவெடுக்க வேண்டிய மனித வாழ்க்கை மிகப்பெரும் சுமையாக மாறிக்கொண்டுள்ளது. மனிதனை ஒரு தனிமனித பிண்டமாகவும், சமூகத்கன்மை இழந்து அழையும் ஒரு வெற்று ஜீவியாகவும் ஆக்கும் போக்கு மிகத்தீவிரமாக வளர்த்தெடுக்கப் படுகிறது. சமுதாய விலங்கான மனிதன் தன்னலவாதியாக சுருக்கப்படுகிறான். மாணவனோ,
தொழிலாளியோ அல்லது விவசாயியோ இத்தன்னல வட்டத்திற்குள் சிக்காதவர்கள் எவரும் இல்லை இச்சமூகத்தில். கோடிக்கால் பூதமென உருவெடுக்க வேண்டிய அடித்தட்டு உழைக்கும் வர்க்கம் பொதுநல சிந்தனைக்கு அப்பாற்பட்டு பிரச்னைக்கு தீர்வை தன்னுள்ளே தேடிக் கொண்டுள்ளது.
      

              தன்னலத்தை விசிறிவிடும் இக்கேடுகெட்ட சமுதாயத்தில் பொதுநலத்தை விதைக்கும் நோக்குடனும், மனிதன் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்னையின் சமூகப் பிண்ணணியை பகுப்காயும் நோக்குடனும் உருவெடுத்ததே இந்த இயக்கம்.
        

           அவ்வகையில் செயல்புரிந்து உழைக்கும் வர்க்க இயக்கங்கள் உருப்பெற தன்கை தருவீர்!
      
        
          கோடிக்கால் பூதமென கிளர்ந்தெழுவீர்!


           நடைபயில்வோம் சமூக விடியலுக்கான பாதையில்!

                                                                             


                                                                                                                   ம. பிரேம் குமார்
       
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்