செவ்வாய், 14 ஜூன், 2011

தோழர். சங்கர சுப்புவின் மகன் மரணம்

தோழர் சங்கர சுப்பு மனித உரிமைகள் மீறல் தொடர்ப்பான பல வழக்குகளை திறமையுடன் நடத்தியவர் ஆவர்.சமூக  அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வருபவர். தோழர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் கடந்த 7ம் தேதி முதல் காணாமல் போனார்.  இவர் எப்படியும் உயிரோடு கிடைத்து விடுவார் என்று  அனைத்து தோழர்களும் நம்பிக்கையோடு இருந்தனர்.  இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் ஏரியில், தோழர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ் குமார் அவர்களின் சடலம், கைப்பற்றப் பட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டுள்ளது.  அவரது மரணத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.தமிழக அரசு உடனடியாக  உரிய விசாரணைகள் நடத்தி அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் . மகனை இழந்து வாடும் தோழர். சங்கர் சுப்புவிற்கும் அவரது குடும்பத்திற்கும்  இயக்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்