வெள்ளி, 21 ஜனவரி, 2011

வழக்கறிஞர்.கயல்விழி - இலங்கையில் கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிப்போம்

 பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் பேத்தியும், தமிழ் அறிஞர் இறைக்குருவனாரின் மகளுமான கயல்விழி, ஜனவரி 19-ம் தேதி, இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிகின்ற கயல்விழி, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளைப் பார்ப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களைச் சந்திப்பதற்காகவும், உரிய ஆவணங்களுடன், இலங்கைக்குச் சென்று இருந்தார். தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், இலங்கை ராணுவம் அவரைக் கைது செய்துள்ளது.

கயல் விழி நாடு திரும்புவதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் ராஜபட்சேவின் வெறி ஆட்டத்தையும்  இந்திய , தமிழக அரசுகளின் கையாலாகாத செயலையும்   வன்மையாக   கண்டிப்போம்.
   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்