சென்ற ஞாயிற்றுக்கிழமை 22.05.2011 அன்று சிவகாசி வட்டத்திற்குட்பட்ட திருத்தங்கள் , ரயில் நிலையம் அருகில் , ஐயப்பன் மண்டபத்தில் மே தின அரங்க கூட்டம் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசேன் ஆஃப் இந்தியன் டிரேட்யூனியன்ஸ்(COITU) ஆகியவற்றின் சார்பாக தோழர்.வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. தோழர்கள். தங்கராஜ் , செல்வராஜ் , பாரதி, ஆனந்த் ஜெயகுமார் , சத்தியமூர்த்தி , சிவகுமார், ஆனந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். உழைக்கும் மக்கள் கமிட்டியின் தலைவர் தோழர்.வரதராஜ் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் சுமங்கலி திட்டம் மூலம் பெண்கள் எப்படி சுரண்டபடுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி தலைமையுரை நிகழ்த்தினார்.
