1930 அக்டோபர் 7ம் நாள் விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர் கொள்ள தீரமுடம் காத்திருந்தனர் புரட்சியாளர்கள் மூவரும். ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்திய நாடே ஒருமித்த குரலில் கோரிக்கை எழுப்பியது. லட்சக்கணக்கான கையெழுத்துகள் கொண்ட மனுக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வந்து குவிந்தன. அநேகம் பேர் இரத்தத்தினாலும் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தனர்.