ஜூலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜூலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி: கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் ஆளும் வர்க்கச் சதி

கல்வி அறிவுக்காக என்ற முழக்கத்தை முன்வைத்து அனைவரையும் கையொப்பமிட மட்டும் தெரிந்தவராக்க முயலும் சமச்சீர் கல்வி
சமச்சீர் கல்வியின் அமுலாக்கத்தைத் தமிழக அரசு நிறுத்தி வைத்ததிலிருந்து அதற்கு எதிராக எழும் குரல்கள் பெரும்பாலும் இடதுசாரி, அதிதீவிர இடதுசாரி என்று அறியப்படும் அணிகளிடமிருந்தே வருகின்றன.

தற்போதைய தமிழக அரசின் அந்நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ.) சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பாகும். சி.பி.ஐ(எம்). கட்சி இன்றுவரை தமிழகத்தைத் தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க-வுடன் உறவு வைத்துக் கொண்டுள்ள கட்சி.

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்

அடக்குமுறைகள், தாக்குதல்கள், பொய் வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடும் ஜுலியன் அசான்ஜ்

ஜனநாயக அமைப்பில் அதாவது முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் பத்திரிக்கைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படுகின்றன. மனித குலத்தின் வளர்ச்சிப் போக்கில் தோன்றிய சமூக அமைப்புகள் அனைத்திற்கும் சில அடிப்படை முழக்கங்கள் இருந்தன. நிலவுடமை அமைப்பில் ஆண்டவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற முழக்கம் இருந்தது.

அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தாத சமச்சீர் கல்வியால் சமச்சீர் வருமா?

அரசுப் பள்ளிக் கல்வியின் தரத்தையும் அரசுப்பள்ளி ஆசிரியரின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்தாமல் கல்வியின் மேம்பாடு குறித்துப் பேசுவது ஏமாற்று வேலையே இந்த ஆண்டு அமல் செய்யப்படவிருந்த சமச்சீர் கல்விக் கொள்கை பதவிக்கு வந்துள்ள அ.இ.அ.தி.மு.க. அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கல்வியாளர்கள் நிபுணர்கள் பல்வேறு பார்ப்பனிய எதிர்ப்பு இடதுசாரி அமைப்புகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் இவைதவிர சி.பி.ஐ(எம்). கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் இவை அனைத்தும் இவ்வாறு சமச்சீர் கல்வி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பல்வேறு விதங்களில் விமர்சிக்கின்றன.

மாறிவரும் இந்திய வெளிநாட்டுக் கொள்கையும் மாறாத இந்திய இடதுசாரிகளின் பார்வையும்

உலகம் முழுவதிலும் உள்ள ஏறக்குறைய 60 நாடுகளில் ஆட்சியாளர்களின் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் செயல்பாடுகள், போக்குகள் விக்கிலீக்கின் கேபிள் கசிவுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.

அமெரிக்கா பல நாடுகளின் வி­ஷயங்களில் உள்நோக்குடன் எவ்வாறு செயல்படுகிறது என்பதும் விக்கிலீக் மூலம் அம்பலப்பட்டுள்ளது.

உள்ளொன்றும் புறமொன்றும்

ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்றதும், தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருப்பதுமான ஜனநாயகத்திற்கான கிளர்ச்சிகளை வெளிப்படையாக ஆதரிப்பது போல் அறிவிப்புகளை அமெரிக்கா வெளியிட்டாலும் அதன் உள்நோக்கம் எவ்வாறு உண்மையான ஜனநாயகம் அந்நாடுகளில் மலர்வதற்கு எதிராக இருக்கிறது என்பதில் தொடங்கி எவ்வாறு அமெரிக்காவின் அதிகார வர்க்க நிர்வாக, ராணுவக் கூட்டு சுதந்திரமானவை என்று கருதப்படும் அந்நாட்டின் பத்திரிக்கைகளையும் வளைத்துப் போட்டுப் பல உண்மைகளை வெளிவரவிடாமல் நாசூக்காகத் தடுக்கிறது என்பது வரை பல விஷ‌யங்கள் கேபிள் கசிவுகள் மூலமும் ஜீலியன் அசான்ஜ்-ன் பல்வேறு நேர்காணல்களின் மூலமும் அம்பலமாகிக் கொண்டுள்ளன.

அறிவைப் பரப்ப வேண்டிய ஆசிரியர்கள் அறிவிற்கே முட்டுக்கட்டை ஆகலாமா?

அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளைப் பொறுப்புள்ள பெற்றோர் சேர்க்கத் தயங்குவதற்கு ஒரு முக்கியக் காரணம் அங்கு ஆங்கிலம் ஒரு மொழி என்ற ரீதியில் முறையாகக் கற்பிக்கப்படுவதில்லை என்பதே. இன்றைய உலகமயப் பின்னணியில் ஆங்கில அறிவு வேலைச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. அதனைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக அப்பள்ளி மாணவர்கள் இருப்பதால் அவர்கள் மேல் படிப்பிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.நமது ஆசிரியர் சமூகம் பொறுப்புள்ளதாக இருந்தால் மாணவரின் இந்தப் போதாமையைக் கருத்திற் கொண்டு அவர்களது ஆங்கில அறிவை மேம்படுத்தக் கூடுதல் சிரத்தை எடுத்துக் கற்பிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆனால் இங்கோ ஆசிரியர் எனும் குதிரைகள் கீழே தள்ளுவது மட்டுமல்ல: அவை குழியும் பறிக்கின்றன.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது மக்கள் மற்றும் கல்வியின் பால் அக்கறை கொண்ட பலரது முன் முயற்சியினால் ஆங்கில வழியில் கற்பிக்கும் பிரிவொன்று 6‡வது வகுப்பில் தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று முதன்முதலில் ஆங்கில வழியல் சேர்ந்த மாணவர்கள் +2 வகுப்புவரை வந்துவிட்டனர். எனவே +2 வகுப்பிலும் ஆங்கிலப் பிரிவு ஒன்றைத் தொடங்க வேண்டிய கட்டாயம் பள்ளிக்கு ஏற்பட்டது.

மேலும் படிக்க

ஆசிரியர் சமூகம் அன்றும் இன்றும்

70-களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறையினால் அப்போது நடத்தப்பட்டு வந்த வாய்ஸ் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் என்ற இதழில் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஒருவர் அவரிடம் பயிலும் ஒரு மாணவன் குறித்துக் கட்டுரை ஒன்றினை எழுதியிருந்தார். பொதுவாக ஆசிரியர்கள் குறித்து மாணவர்கள் பேசுவதற்கு நிறைய இருக்கும். ஆனால் அப்போது மாணவர் குறித்த உயர்வான வி­யங்களையும் ஆசிரியர் தயக்கமின்றிப் பேசுவர் என்ற நிலையும் இருந்தது. இது அக்கல்லூரியில் கல்வி ஒரு வாழ்க்கையாக இருந்ததைப் பறைசாற்றியது.

மேலும் படிக்க

வானம்: சகஜமாகிவிட்ட சமூக அபத்தங்களின் படப்பிடிப்பு

“பொய் சொல்றது ஈஸி, உண்மைய சொல்றது தான் கஷ்டம்”

“இந்த உலகத்தில் இரண்டே ஜாதிதான் உண்டு. ஒன்னு பணக்கார ஜாதி இன்னொன்னு ஏழை ஜாதி”

“இங்க யாரு போலீஸ் யாரு திருடன்னே தெரியல”

இதுபோன்ற வசனங்கள் எங்கும் எவரிடமும் எடுபடும். ஏனெனில் இவை இன்று நிலவும் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை.

இந்த சமூகத்தில் தன்னிடமுள்ள திறமைகளை வியாபாரப் பொருளாக்கத் தெரிந்தவன் தான் வாழத் தெரிந்தவன். அவன் தான் வாழ முடிந்தவனாகவும் இருப்பான். வியாபாரம் ஒரு விரும்பத்தகுந்த தொழிலல்ல. அதனைத் திறமையாகச் செய்ய நிறையப் பொய் பேசியாக வேண்டும்.உண்மையை மட்டுமே பேசவும் உண்மையாக வாழவும் விரும்புபவர் எவரும் வியாபாரி ஆக முடியாது. அவர் வியாபாரத்தில் தோற்றுப் போய்விடுவார்.

மார்க்சிய சிந்தனை மையப் படிப்பு வட்டம்

நாகர்கோவில்
மார்க்சிய சிந்தனை மையத்தின் கம்யூனிஸ்ட் அறிக்கை மீதான மாதம் ஒன்று என்ற அடிப்படையில் 3 முறை நடந்த பின் விவாதங்களின் சாரம்சத்தைத் தொகுத்து வழங்கும் 4-வதுகட்ட விவாதக் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் கடந்த ஜீன் 19-ம் நாள் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் சாரம்சத்தையும் அதன் இன்றைய பொருத்தத்தையும் தொகுத்து வழங்கும் பொறுப்பினை முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் சிறப்புற ஆற்றினார்.
இன்றும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் கருத்துக்கள் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு வழிகாட்டும் தன்மையைக் கொண்டவையாக எவ்வாறு உள்ளன என்பதை விளக்கும் சீரிய உரை ஒன்றினை அவர் முன்வைத்தார்.

தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு காரணம் என்ன?

தொழிலாளர் இயக்கமும் சோசலிசமும் இல்லாமற் போயிருப்பதே தொழிலாளர் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எல்லாம் காரணம் -மேதினக் கூட்டத்தில் தோழர் ஆனந்தன் உரை சி.டபிள்யு.பி., உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டி, சென்ட்ரல் ஆர்கனிசே­ன் ஆஃப் இந்தியன் டிரேடு யூனியன்ஸ் ஆகிய அமைப்புகளின் சார்பாக இந்த ஆண்டின் மேதினம் திருத்தங்கல் ஐயப்பன் அரங்கத்தில் 22.05.2011 மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு கூட்டம் மூலமாகச் சிறப்புற அனுஷ்டிக்கப்பட்டது. கூட்டத்திற்கு உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டியின் மாநில அமைப்பாளர் தோழர் வி.வரதராஜ் தலைமையேற்றார். உழைக்கும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளான தோழர்கள் தங்கராஜ் (பட்டாசு), செல்வராஜ் (அச்சகம்), சத்தியமூர்த்தி (அரசு ஊழியர்), பாரதி (அரசு ஊழியர்), ஆனந்த் ஜெயக்குமார் (பொதுத்துறை), த.சிவக்குமார் (மாற்றுக் கருத்து இதழ் ஆசிரியர்) ஆகியோரும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். சி.டபிள்யு.பி-ன் தென் இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் அ.ஆனந்தன் அதில் சிறப்புரை ஆற்றினார். தோழர்களின் உரைகள் தோழர் வரதராஜ் தனது தலைமை உரையில் 8 மணி நேர வேலை நாள் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகத் தற்போது ஆகியுள்ளது.

தமிழகத் தேர்தல் முடிவுகள்: உழைக்கும் வர்க்க அணிகளிடம் முன்னிறுத்தியுள்ள வாய்ப்புகள்

தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்தல்களின் மூலமாக மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் தீர்க்கப் படுவதில்லை. மேலும் மக்கள் முழுமையான சுதந்திர மனநிலையுடன் அவர்களுடைய பிரச்னைகளை மனதில் வைத்து இந்த அமைப்பில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதுமில்லை.

வெளிப்படையான அடக்குமுறை மூலம் அவர்களுடைய சிந்தனை சுதந்திரமானதாக இல்லாதவாறு ஆக்கப்படாவிட்டாலும் எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களால் அடிப்படைப் பிரச்னைகளாக இல்லாதவை பிரச்னைகளாக ஆக்கப்படுகின்றன. அனைத்து இல்லங்களிலும் மிகப் பெரும்பாலான சமயங்களில் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் மூலம் ஊடகங்களால் பரப்பப்படும் செய்திகளே மக்களின் மனதைப் பெருமளவு ஆக்கிரமித்து அவர்களது மனதில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவையாக உள்ளன.

அவர்களாகவே சிந்தித்து அவர்களின் பிரச்னைகள் சார்ந்த கருத்துக்களை வகுத்தெடுத்துக் கொள்ள மிகக் குறைந்த வாய்ப்பே இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு உள்ளது. அதனால் பணபலமும் ஆளும்வர்க்க ஆதரவும் கிட்டும் ஊடகங்களின் பின்பலமும் கொண்ட உடைமை வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் கட்சிகளில் ஏதாவதொன்றே ஆட்சிக்கு வரும் என்ற சூழ்நிலையே தற்போது பொதுவாக நிலவுகிறது.

முகப்பு

புதிய பதிவுகள்