வியாழன், 3 மே, 2012

இயக்கவியல் பொருள்முதல் வாதம் ஒரு முழுமையான பார்வை - மார்க்சிய படிப்பு வட்டம் , நாகர்கோவில்


கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவிலை சேர்ந்த அனைத்து இடதுசாரி கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் 27 .02 .2011 அன்று "மார்க்சிய சிந்தனை மையம்" என்ற அமைப்பை உருவாக்கினர் .அதில்  கீழ்வரும்  பொது வேலை திட்டத்தில் செயல்படுவது என்றும்  இதே போன்ற பொது வேலைதிட்டத்தை  இந்தியா முழுவதும் கொண்டு செல்வது என்றும் உறுதி ஏற்றனர்.



இந்திய அளவிலும் , உலக அளவிலும் இன்று தொழிலாளர் வர்க்கத்தில் புரட்சிகரமான மாற்றத்திற்கு இடையூறாக இருப்பது; புரட்சி திட்டம் பற்றிய கருத்து வேறுபாடுகளே! ஆதலால் ஒரு உண்மையான புரட்சிகர பாதையையும் , புரட்சிகர கட்சியையும் நல்ல எண்ணத்தோடும் , நல்ல மனதோடும் நன்கு ஆராய்ந்து கண்டுபிடிக்கும் வரை "மார்க்சிய சிந்தனை மையம்" மூலம் கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய தவறிய செயல்பாடுகளை  இந்த 
அமைப்பின் மூலம் செய்வது என்றும் , அதே வேளையில் அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளில் பணியாற்றுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் செய்ய தவறிய கீழ்வரும் செயல்களை இந்த அமைப்பு செய்ய உறுதி  ஏற்று உள்ளது.

அந்த செயல்திட்டங்கள் 
1 . இடது சாரிகளின் ஒற்றுமைக்காக பாடுபடுதல்
2 .போராட்ட கமிட்டிக்களை ஆங்காங்கே உருவாக்கி போராட்டங்களை கட்டி எழுப்புதல் 
3 . அரசியல் வகுப்புகள் நடத்துவது 
4 . மூடநம்பிக்கைகளை எதிர்த்து இயக்கம் நடத்துதல் 
5 . சமரசமற்ற போக்கை கடைபிடிப்பது 
6 . அனைத்து நிலைகளில் ஒடுக்கப்படும் தொழிலாளர்களின் நலனுக்காகவும் பாடுபடுதல் 
7.சாதிவாதம் , மதவாதம் ,இனவாதம் போன்ற தொழிலாளர்களின் ஒற்றுமையை குலைக்கும் செயல்களில் இருந்து விலகி இருப்பது என்பதை வலியுறுத்துவது

போன்ற அடிப்படை கொள்கையிலிருந்து இம்மியளவும் வழுவாமல் இன்று வரை மார்க்சிய  சிந்தனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சார்ப்பாக ஒவ்வொரு மாதமும் மார்க்சிய படிப்பு வட்டம் நடத்தப்படுகிறது. மூத்த எழுத்தாளர் தோழர்.பொன்னீலன் அவர்களால் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' முதலில் ஆரம்பிக்கப்பட்டு விரிவாக  விவாதிக்கப்பட்டது.அடுத்து 'இயக்கவியல் பொருள் முதல்வாதம்' வாசிப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு  கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) அமைப்பின் தென் இந்திய பொதுச் செயலாளர்     தோழர்.அ..ஆனந்தன் அவர்களால் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் அனைத்து பகுதிகளும் நடத்தப்பட்டு விட்டது. அடுத்து வேறு மார்க்சிய  நூலை விவாதிக்கும் முன்னதாக இயக்கவியல் பொருள் முதல்வாதத்தை  தொகுப்பாக எடுத்துரைப்பதோடு இயக்கவியலை நடைமுறை  அரசியலுக்கு எப்படி கைகொள்வது என்பதும் இந்த வகுப்பில் விவாதிக்கப்பட இருக்கிறது.   இந்த படிப்பு வட்டத்தில் அனைத்து மார்க்சிய சிந்தனைவாதிகளும் ,முற்போக்கு எண்ணம் கொண்டோரும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : லைசியம் பள்ளி, தக்கலை , நாகர்கோவில் 

நாள் : 13 .05 .2012 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணி


பொருள் : இயக்கவியல் பொருள்முதல்வாதம் -  ஒரு முழுமையான பார்வை


தலைமை : தோழர்.பிரசாத் 


சிறப்புரை : தோழர். அ.ஆனந்தன் 


ஒருங்கிணைப்பாளர் : தோழர்.போஸ்


தொடர்பிற்கு : தோழர். மகிழ்ச்சி செல் : 9443347801

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்