வெள்ளி, 18 நவம்பர், 2011

இடதுசாரி அங்கிக்குள் ஒளிந்திருக்கும் ஜாதியம்

   (மாற்றுக்கருத்து  15 செப்டம்பர் - 14 நவம்பர், 2008)
இடதுசாரி ஞானஸ்நானம் வழங்கும் மதகுருமார்களாக தங்களைத் தாங்களே  வரித்துக் கொண்டு, சிற்றிதழ் நடத்துபவர்கள், பின்நவீனத்துவவாதிகள் என்ற பெயர்களில் தங்களை அழைத்துக் கொள்ளும் பலர், தமிழகத்தில் இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற ஒளிவட்டம் பின்னால் சுழல வலம்வந்து கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் வெறும் அரவமாக ஒலித்த அவர்களின் குரல்கள் தற்போது பேரிரைச்சலாக உருவெடுத்துள்ளன.  அதற்கு காரணம் அவர்களின் குரல் வலிமை பெற்றுவிட்டது, அதனால் அதன் எதிரொலி அதிகமாகிவிட்டது என்பதல்ல.  தங்களது பத்திரிக்கைகளின் பக்கங்களில் 25 சதவீதத்தை விளம்பரங்களுக்கும் 60 சதவீதத்தை சினிமா மற்றும் சினிமா நட்சத்திரங்கள் குறித்த செய்திகளை எழுதி நிரப்பவும் பயன்படுத்தும் பிரபல பத்திரிக்கைகளும் கூட இதுபோன்ற எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் எழுதுவதற்கென தங்களது இணை இதழ்களில் வாய்ப்பளிக்கின்றனர். அவை அவ்வாறு வாய்ப்பளிப்பதற்கான காரணம், இடதுசாரி சிந்தனைகளின் மேல் அந்த பத்திரிக்கைகளுக்கு திடீரென ஏற்பட்டுவிட்ட புதிய காதலா அல்லது அதுவும் ஒரு வித்யாசமான வியாபார யுக்தியா என்பது போன்ற வி­யங்களுக்கு நாம் பின்னர் வருவோம்.

1 கருத்து:

  1. சரியான அலசல்...
    சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் மீது எனக்கு என்றும் மரியாதை இல்லை என்றாலும் அவரின் வாசகர்கள் என் இடது பக்கம் சாய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பிற்போக்கு தனமாய் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை...
    சுஜாதா பல இளம் இடது சாரி எழுத்தாளர்களை பாதை மாற செய்தார் என்று ஒரு வாதம் உண்டு,, அப்படி தங்களை மாற்றிக் கொண்ட எழுத்தாளர்கள் இடது சாரி வேஷம் வேண்டுமானால் போட்டு கொண்டு இருந்திருக்கலாம்.. ஆனால் அவன் இடது சாரியாய் இருந்திருக்க முடியாது...

    மேலும்,
    இட ஒதுக்கீடு ஜாதியை தூக்கி பிடிப்பதில் இருந்தே ஜாதியை ஒழிக்க முடியாது என்பது திண்ணமாய் தெரிகிறது..
    அதற்க்கு பதிலாக பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அமைந்தால் மகிழ்ச்சியே...
    ஆனால்
    நல்ல சம்பளம் வாங்கும் பலர் இன்னும் பச்சை நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் பொழுதும், நான்கு வீடு கட்டி வாடகை விடும் ஒருவன் அந்த வாடகை வருமானத்தை கணக்கில் காட்டாததாலும் சின்ன சிக்கல் வர வாய்ப்புள்ளது...
    இந்த கட்டுரை இட ஒதுக்கீடு குறித்து விரிவடைந்தால் விவாதம் சிறக்கும், விடிவும் வரும்...

    பதிலளிநீக்கு

முகப்பு

புதிய பதிவுகள்