செவ்வாய், 22 நவம்பர், 2011

ஆடு, கோழி பலியிடல் தடை அரசாணையும் தடம்புரண்ட தமிழக கம்யூனிஸ்டுகளின் வர்க்க சமரச - ஜாதியவாதச் சறுக்கலும்

                                 முதற்பதிப்பு:டிசம்பர் 2003
கோயில்களில் பறவைகளையும் விலங்குகளையும் பலி கொடுப்பதை தடை செய்யும் வகையில் 1950 முதல் இருந்து வரும் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு சமீபத்தில் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது.  இந்த ஆணை பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிடையே பல்வேறு விதமான பிரதிபலிப்புகளை  வெளிக்கொணர்ந்துள்ளது.  பல கட்சிகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் புறம்பான நிலைபாடுகளை இந்த விஷயத்தில் எடுத்துள்ளன.  எனவே தமிழக அரசின் இந்த ஆணை இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ளதன் பின்னணி என்ன? இது போன்ற ஆணைகள் மற்றும் சட்டங்கள் குறித்து உணர்வு பெற்ற உழைக்கும்  வர்க்கத்தின் நிலை எதுவாக இருக்க வேண்டும்பல்வேறு கட்சியினர் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் தங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமான நிலையினை எடுக்கும் நிலைக்கு ஏன் இந்த விஷயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்? என்ற கேள்விகளை அலசி ஆராய்வது இந்தப் பிரசுரத்தின் நோக்கமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்