வியாழன், 18 ஆகஸ்ட், 2011

அண்ணா ஹசாரேவை கைது செய்ததன் மூலம்அம்பலமாகி போன மத்திய அரசின் பாசிச முகம்

சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டுவரவேண்டும் என்று அடுக்கடுக்கான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார். அதற்கு ஆதரவு அலை நாளுக்கு நாள் பெருகி
 கொண்டே வருகிறது. ஆனாலும் அப்படி ஒரு மசோதா வருவதை ஆளும் காங்கிரஸ் அரசு விரும்பவில்லை . பாராளமன்றத்தில் மிகவும் வீக்கான லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறது . இதனை முறியடிக்க கடைசிக்கட்டமாக சாகும் வரை உண்ணாவிரதத்தை அண்ணா ஹஜாரே அறிவித்தார். அதற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வந்த வேளையில் மத்தியில்  ஆளும் காங்கிரஸ் அரசு அண்ணா ஹசாரேவை கைது  செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது. அங்கும் உண்ணாவிரத்தை தொடர்ந்து வருகிறார் அண்ணா . ஜனநாயக சக்திகளின் குரல்வலையை நெறிக்கும் செயலை ஆளும் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இது ஹசாரேவை கைது செய்ததன் மூலம் மதிய அரசு தனது கொடூரமான பாசிச முகத்தை அனைவருக்கும் காட்டியுள்ளது. ஆளும் மத்திய அரசின் ஜனநாயக விரோத  போக்குகளை கண்டிப்போம். சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவின் நியாயமான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்