திங்கள், 2 ஏப்ரல், 2012

மாதாங்கோவில்பட்டியில் தியாகி பகத்சிங்கின் நினைவு ஸ்தூபி

பகத்சிங் லட்சியம் சோஷலிச சமூக அமைப்பு உருவாகும் வரை போராட்டம் நீடிக்க வேண்டும் என்பதே ஆகும். பகத்சிங்கின் லட்சிய பாதையை அடியொட்டி பயணிக்கும் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ) மற்றும் மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) சார்பில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 23 அன்று பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு  சிவகாசி பகுதிகளில் நினைவு  ஸ்தூபி அமைத்து தியாகி பகத்சிங்கின் தியாகம் நினைவு கூறப்படுவதோடு, அவரின் லட்சியத்தையை நிறைவேற்றும் பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டும் விதமாக மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்படும் . இந்த வருடம் மார்ச் 23   அன்று தியாகி பகத்சிங்கின் 81 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசி தாலுகா, தமிழ்நாடு சிமண்ட்ஸ் ஆலங்குளத்தில் உள்ள  மாதாங்கோவில்பட்டியில்   மார்ச் 23 அன்று தியாகி பகத்சிங்கின் நினைவு ஸ்தூபி  எழுப்பப்பட்டு  வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


தோழர்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பகத்சிங்கின் கொள்கையை நாம் இன்று மக்களிடம் கொண்டு செல்வதன் வரலாற்றுக்கடமை என்ன என்பது பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. . புதிய நிகழ்வாக நடைபெற்ற அந்த நிகழ்ச்சி அந்த பகுதி வாழ் இளைஞர்களுக்கு  நம்பிக்கை  அளிக்கும் விதமாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடத்த அந்த பகுதி வாழ் மக்களால்  உறுதி மொழி எடுக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP ),
 மாணவர் ஜனநாயக இயக்கம் (SDM ) ,
விருதுநகர் மாவட்டம். 

தொடர்பிற்கு:  
த. செல்வகுமார் -8940581750

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முகப்பு

புதிய பதிவுகள்